கொரோனா வைரஸ்: தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன்

இந்த கிறிஸ்துவ குழுவில் உள்ள 61 வயதான மூத்த உறுப்பினர் ஒருவருக்கு முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என தென் கொரியாவின் சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே இந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து, விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த குறிப்பிட்ட தேவாலயம் நடத்திய பல பிரார்த்தனை கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.


எனவே அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் உள்ளவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கக்கூடும். மேலும் பரவ வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.