ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக ராணுவ போலீசார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ராணுவ போலீசா கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தற்போது காண முடிகின்றது.
வாரத்தில் 7 நாட்களும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் ராணுவ போலீசார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.